BREAKING NEWS *** டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரிய பொதுநல மனு தள்ளுபடி மனுதாரருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம் *** முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி SDPI கட்சி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி SDPI கட்சி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

 தமிழக அரசு முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி திருச்சியில் வருகின்ற மார்ச் 22 இல் SDPI கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக மாபெரும் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்

SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கே முபாரக் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


இதில் மாவட்ட பொது செயலாளர் தமீம் அன்சாரி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.மாவட்ட செயலாளர் மதர்.Y. ஜமால் முஹம்மது அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் சமகால அரசியல் சூழ்நிலைகளை பற்றியும், திருச்சி மாநகராட்சி முழுவதும் மக்கள் சந்திக்க கூடிய கொசு மற்றும் சாக்கடை பிரச்சனைகளை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.



இதில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.தமிழக அரசு முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி திருச்சியில் வருகின்ற மார்ச் 22 இல் மாபெரும் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

2.திருச்சியில் அதிகரித்து வரும் கொசு தொல்லையால் மக்களுக்கு ஏற்படும் நோய்களை மாநகராட்சி அதிகாரிகள்  உடனடியாக கட்டுப் படுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.மாநகராட்சி முழுதும் போதை பொருட்களின்  புழக்கம் அதிகம் இருந்து வருவதால் இளம் தலைமுறையினர்கள் வாழ்வு சீரழிந்து வருவதை உடனே போர்க் கால அடிப்படையில்  சரி செய்ய வேண்டும். ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த செயற்குழுவில்  மாவட்ட,தொகுதி,

அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இறுதியாக தெற்கு மாவட்ட செயலாளர் ஏர்போர்ட்.மஜீத் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

Post a Comment

0 Comments