BREAKING NEWS *** நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** தனி நபரை விட கட்சி தான் முக்கியம் என நினைப்பவன் - எம்.பி திருச்சி சிவா பேட்டி

தனி நபரை விட கட்சி தான் முக்கியம் என நினைப்பவன் - எம்.பி திருச்சி சிவா பேட்டி

தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு காரை மறைத்து கருப்பு கொடி காட்ட முயன்றதாக திருச்சி சிவாவின் ஆதரவாளர் 10 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் , திருச்சி சிவா அவரின் இல்லத்தில் நின்று கொண்டு இருந்த கார் கண்ணாடி உடைத்தும் இருசக்கர வாகனத்தை உடைத்தும் பிரச்சனையில் ஈடுபட்டனர். 



இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் விசாரணைக்காக இருந்த திருச்சி சிவாவின் ஆதரவாளர்களை, காவல் நிலையத்திற்குள் புகுந்து அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் தாக்கிய சிசிடிவி காட்சி  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட அமைச்சரின் ஆதரவாளர் மீது  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தெரிவித்தது... இந்நிலையில் காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய போது பெண் காவலர் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் திருச்சி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை செயற்குழு உறுப்பினரும்  60 வது வார்டு கவுன்சிலருமான காஜாமலை விஜய்,  மாவட்ட துணை செயலாளரும் 57வது வார்டு கவுன்சிலருமான கிராப்பட்டி முத்து செல்வம், மாவட்ட பொருளாளரும் அந்தநல்லூர் ஒன்றிய தலைவருமான  துரைராஜ், 55 ஆவது வார்டு கவுன்சிலர் ராமதாஸ் , பொன்நகர் பகுதி பிரதிநிதி திருப்பதி உள்ளிட்ட 5 பேர் கைது சிறையில் அடைத்தனர் 


 வெளிநாடு சென்றிருந்த திருச்சி எம்பி சிவா விமானம் மூலம் திருச்சி வந்தார்.அங்கிருந்து நேரடியாக கண்டோன்மென்ட் பகுதியில் எஸ்.பி.ஜ காலணியில் அவரது இல்லத்திற்கு வந்து உடைக்கப்பட்ட கார் கண்ணாடி இரு சக்கர வாகனங்கள் என பார்வையிட்ட பிறகு அவரது ஆதரவாளர்களிடம் என்ன நடந்தது என கேட்டு தெரிந்துக் கொண்டார்‌


திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியது : 


நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு குழு 178 நாடுகள் கலந்து கொண்ட மா நாட்டிற்காக பக்ரேன் சென்று இருந்தேன்.


நடந்த செய்திகளை நான் ஊடகங்கள் வாயிலாகும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டேன்.


இப்போது நான் எதையும் பேசுகின்ற மனநிலையில் இல்லை கடந்த காலத்திலும் இது போன்ற பல சோதனைகளையும் சந்தித்துள்ளேன் - அதையெல்லாம் நான் பெரிதுபடுத்தியதில்லை யாரிடமும் சென்று புகார் அளித்ததில்லை.


நான் அடிப்படையில் முழுமையான அழுத்தமான  கட்சிக்காரன் - தனி மனிதனை விட இயக்கம் பெரிது கட்சி பெரியது என்று எண்ணுபவன் நான்.

இப்போது நடந்து இருக்கிற இந்த நிகழ்ச்சி மிகவும் மன வேதனையை ஏற்படுத்துகிறது - நான் ஓரி இல்லாத போது என்னுடைய குடும்பத்தார் மிகவும் மன வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.

என் வீட்டில் பணியாற்றிய 65 வயது பெண்மணி எல்லாம் காயப்பட்டு உள்ளார்.


நான் பேசுவதற்கு நிறைய உள்ளது ஆனால் நான் இப்போது பேசக்கூடிய மன நிலையில் இல்லை.


மன சோர்வில் உள்ளேன் - மனசு சோர்வு என்கிற வார்த்தையை நான் இதுவரை பயன்படுத்தவில்லை.

Post a Comment

0 Comments