BREAKING NEWS *** இரட்டை இலை சின்னத்தை முடக்குங்கள்.. எனக்கு பக்கெட் சின்னம் கொடுங்கள்.. ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு! *** திருச்சி 28,29 வார்டு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு- நன்றி தெரிவித்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

திருச்சி 28,29 வார்டு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு- நன்றி தெரிவித்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

 28 மற்றும்,29 வது வார்டில் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆரம்ப சுகாதார நிலையம் இன்று அமைச்சர் கே.என்.நேரு அவர்களால் திறக்கப்பட்டது.திராவிட முன்னேற்றக் கழகத்தின் அழைப்பை ஏற்று திருச்சி மாவட்ட தமஜக திறப்பு விழாவில் பங்கேற்றது.


சுகாதார நிலையம் அருகே உள்ள  பிணம் எரிக்கும் எரி கொட்டகையை மின் மயானமாக உடனடியாக மாற்றி இங்கு வரும் நோயாளிகளுக்கு மேலும் நோய் பரவும் அபாயத்தை உடனடியாக தடுக்க வேண்டும்.



பத்து ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கணக்கான குடியிருப்புகளும் வணக்க வழிபாட்டு தளங்களும் (பள்ளிவாசல்) உள்ள அப்துல்கலாம் நகருக்கு இதுவரை சாலை அமைத்து தரவில்லை எனவே அந்த பகுதிக்கு உடனடியாக சாலை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் அமைச்சர் மற்றும் மேயர் அவர்களிடம் வழங்கப்பட்டது.



திருச்சி மேற்கு தொகுதி 28 மற்றும் 29 வது வார்டில் மக்கள் பயன்பாட்டிற்கு ஆரம்ப சுகாதார நிலையம் இன்று நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 




திராவிட முன்னேற்றக் கழகத்தின் அழைப்பை ஏற்று திருச்சி மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் மேற்கு தொகுதி செயலாளர் கே.டி.எஸ் பிர் முகமது அவர்களின் ஏற்பாட்டில் தென்னூர் பகுதி மற்றும் 28 29ஆவது வார்டு நிர்வாகிகளுடன் கலந்து கொண்டனர் 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அண்ணா நகர் பகுதி செயலாளரும் 29 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான கமால் முஸ்தபா அவர்கள் நமது கோரிக்கையை அமைச்சரிடம் வலியுறுத்தி உடனடியாக நிறைவேற்றி தர ஏற்பாடு செய்வதாக கூறினார்.

பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தந்த மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்

Post a Comment

0 Comments