NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** போட்டித் தேர்வுகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி - திருச்சி தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்றது

போட்டித் தேர்வுகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி - திருச்சி தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்றது

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் போட்டித் தேர்வுகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 


இதில் கல்லூரியுடன் இணைந்து வெராண்டா ரேஸ் பயிற்சி நிறுவனம் முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளுக்கான நிகழ்ச்சியை நடத்தியது.


இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர்  விஜய லெட்சுமி தலைமை தாங்கினார். கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத்திறை தலைவர்  பாலமுருகன்  வரவேற்புரை நிகழ்த்தினார்.



நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தாட்கோ தலைவர் மதிவாணன் , தாட்கோ நிர்வாக இயக்குநர்  கந்தசாமி  மற்றும்  வெராண்டா ரேஸ் நிறுவன தலைவர் பரத் சீமான், திருச்சி கிளை நிர்வாக தலைவர் ராகுல் திலகந்தன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்கள்.


நிகழ்ச்சியில் சுமார் 300 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பங்கு பெற்று பயனடைந்தனர்.


 நிகழ்ச்சியின் நிறைவாக திருச்சி கிளை மேலாளர்  சாந்தா ஷீலா  நன்றியுரை வழங்கினார்.

Post a Comment

0 Comments