NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி SDPI கட்சி ஆர்ப்பாட்டம்

முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி SDPI கட்சி ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு 161 வது சட்ட பிரிவை பயன்படுத்தி முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை உடனடியாக  விடுதலை செய்யக்கோரி SDPI கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் மரக்கடை பகுதியில் இன்று கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமையில்  நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது மற்றும் திருச்சி மண்டல தலைவர் ஹஸ்ஸான் பைஜி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். 



மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி, திருவெறும்பூர் தொகுதி தலைவர் அப்பாஸ் மந்திரி, மேற்கு தொகுதி தலைவர் சிராஜ்





மாவட்ட  செயலாளர்கள் மதர் ஜமால் முகமது, ஏர்போர்ட் மஜீத், தளபதி அப்பாஸ் மற்றும் மாவட்ட பொருளாளர் பக்ருதீன் உள்பட நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் ஜமாத்தார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Post a Comment

0 Comments