NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

 தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் மொத்தம் 5,329 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சில்லரை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் எனவும், இந்த ஆண்டில் 4,829 கடைகளாக குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் டாஸ்மாக் பணியாளர்களின் தொகுப்பூதியம் உயர்த்தப்படும் என உறுதி அளித்தார்.


கோயில், பள்ளிகள் அருகே இயங்கியதாக வந்த புகாரில் கடந்த 2 ஆண்டுகளில் 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் செந்தில்பாலாஜி, டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.1100, விற்பனையாளர்களுக்கு ரூ.930, உதவியாளர்களுக்கு ரூ.840 மாதந்தோறும் கூடுதலாக ஊதியம் உயர்த்தி இம்மாதம் முதல் வழங்கப்படும் என உறுதி அளித்தார். 


தமிழகத்தில் மதுவிற்பனை கடந்த 2021-22 ஆம் ஆண்டை விட 2022-23 ஆம் ஆண்டு ஒரே நிதியாண்டில் 8 ஆயிரத்து 47 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

Post a Comment

0 Comments