BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** சென்னை- மதுரை தேஜஸ் ரயில் சேவையில் திடீர் மாற்றம்

சென்னை- மதுரை தேஜஸ் ரயில் சேவையில் திடீர் மாற்றம்

 சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் தேஜஸ் விரைவு ரயில், தாம்பரம், திருச்சி, திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என்பது உட்பட பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றங்களை மதுரை கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது...


திண்டுக்கல் திருச்சி பகுதியில் கட்டுமானப்பணிகள் காரணமாக இன்று(ஏப்.12) ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சென்னை - மதுரை தேஜஸ் விரைவு ரயில் இன்று திருச்சி வரையே செல்லும், அதேநாளில் மறுமார்க்கமாக செல்லும் அந்த ரயில் திருச்சியில் இருந்தே சென்னை புறப்படும். தாமரைப்பட்டி- வடமதுரை இடையே ரயில்வே சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ..



மேலும் இந்த ரயில் பிரிவு பணிகள் காரணமாக இன்று புறப்படும் செங்கோட்டை-மயிலாடுதுறை ரயில் விருதுநகர், மானாமதுரை வழியாக திருப்பி விடப்படும் எனவும், இந்த ரயில் காரைக்குடி மற்றும் திருச்சி, கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வலியாம்பட்டி மற்றும் மணப்பாறை ஆகிய இடங்களில் நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று புறப்படும் சென்னை எழும்பூர் - குருவாயூர் ரயில் விருதுநகர், மானாமதுரை வழியாக திருப்பி விடப்படும். இந்த ரயில் திருச்சிராப்பள்ளி, காரைக்குடி, மானாமதுரை மற்றும் விருதுநகர், மணப்பாறை, திண்டுக்கல், சோழவந்தான், கூடல்நகர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments