திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தகர் அணி சார்பாக முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணியின் மாநில தலைவர் கிண்டி அன்சாரி தலைமை தாங்கினார். மேலும் மாநாட்டில் மாநில பொதுச்செயலாளர் ஜாஃபர் அலி உஸ்மானி துவக்கவுரை நிகழ்த்தினார்.
![]() |
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசியது.. கேரளா ஸ்டோரி திரைப்படத்தை கேரளா மாநிலம் தடை செய்யும் வரை காத்திருக்காமல் தமிழக அரசு இந்தப் படத்தை திரையிடுவதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். கேரளா ஸ்டோரி திரையிடப்படும் திரையரங்கம் முன்பு கண்டிப்பாக போராட்டம் நடத்துவோம் என்றார். மேலும் தமிழ்நாடு ஆளுநர் ரவி அவர்கள் தொடர்ந்து அரசியல், தேவையற்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார், இதை கண்டிக்கிறோம். உடனடியாக தமிழக ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் பாஜகவுடன் இணைந்து அரசியல் பேச தொடங்கலாம், தவிர ஆளுநர் பதவியில் இருந்து பேசுவது அநாகரிகம் அற்ற செயல் ஆகும். ஆளுநர் இல்லாத தமிழகத்தை நோக்கி தமிழக மக்கள் முன்னேறி கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார். ஆனால் அவருடைய திட்டங்களுக்கு அரசு அதிகாரிகள் உறுதுணையாக இல்லை என்பதே தெள்ளத்தெளிவாக தெரிய வருகிறது. ஆகையால் அரசு அதிகாரிகளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் மக்களுகான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கையை வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் சிறு குறு வணிகர் மீது அடாவடியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக எங்கள் கட்சி சார்பாக பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறோம். தேர்தல் நெருங்கும் நேரத்தில் உரிய அறிவிப்பினை நிச்சயமாக அறிவிக்கப்படும். குறிப்பாக பாஜகவை தமிழகத்தில் நுழையவிடாமல் இருப்பதற்காக எந்த திட்டங்களையும் நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்வோம் என்றார்.
0 Comments