BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் உள்ள பால்பண்ணை பேருந்து நிலையம் இருந்தும் குறுகலான,வளைவுகளில் நிறுத்தப்படும் பேருந்து உயிர் பலி தடுக்க SDPI கட்சி கோரிக்கை

திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் உள்ள பால்பண்ணை பேருந்து நிலையம் இருந்தும் குறுகலான,வளைவுகளில் நிறுத்தப்படும் பேருந்து உயிர் பலி தடுக்க SDPI கட்சி கோரிக்கை

 திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் உள்ள பால்பண்ணை பேருந்து நிலையம் இருந்தும் குறுகலான,வளைவுகளில் நிறுத்தப்படும் பேருந்து உயிர் பலி தடுக்க வேண்டும் SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட ‌பொது செயலாளர் தமீம் அன்சாரி கோரிக்கை வைத்துள்ளார்.

திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில் உள்ள திருச்சி பால்பண்ணை பேருந்து நிலையம் அனுதினமும் ஆயிரக் கணக்கான மக்கள் தஞ்சை,கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இருக்கும்.


ஆனால் பால்பண்ணை பேருந்து நிறுத்தம் என்பது நெடுஞ்சாலை துறையால்  பல இலட்சம் ரூபாயில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் கேட்பாரற்று,உபயோகம் இல்லாமல் இருக்கின்றது.

ஆனால் இப்பகுதியில் வரும் பேருந்துகள் குறுகிய வளைவு கொண்ட பகுதியில் நிறுத்தி மக்களை ஏற்றுவதால் போக்குவரத்து  நெரிசலும் ,இறப்புகளும் நாளுக்கு நாள் அதிகமாக ஆகிறது. இந்த போக்கை SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் வன்மையாக கண்டிக்கிறது.


இது சம்மந்தமாக பல ஆண்டுகளாக  மனு அளித்தும்,எவ்வித தீர்வும் ஏற்படாமல் ஒரிரு நாட்கள் மட்டும் காவல்துறை அதிகாரிகள் நிற்கின்றனர், பின் வழக்கம் போல் விபத்தும் தொடர்கிறது.

இனியும் இது போன்று தொடர்ந்தால் அப்பகுதியில் முறையற்ற வகையில் நிறுத்தப்படும் பேருந்துகள் SDPI கட்சியின் சார்பாக சிறைபிடிக்கப்படும் என தெரிவித்தார் 



Post a Comment

0 Comments