BREAKING NEWS *** இரட்டை இலை சின்னத்தை முடக்குங்கள்.. எனக்கு பக்கெட் சின்னம் கொடுங்கள்.. ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு! *** சிறுமிக்கு இதயத்தில் இருந்த ஓட்டையை அதிநவீன சிகிச்சை மூலம் சரி செய்த திருச்சி காவிரி ஹார்ட்சிட்டி மருத்துவக் குழுவினர்.

சிறுமிக்கு இதயத்தில் இருந்த ஓட்டையை அதிநவீன சிகிச்சை மூலம் சரி செய்த திருச்சி காவிரி ஹார்ட்சிட்டி மருத்துவக் குழுவினர்.

 திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனையில் 7 வயது சிறுமிக்கு இதயத்தில் இருந்த ஓட்டையை செரா பிளாக்ஸ் செப்டல் அக்லூடர் என் நவீன சிகிச்சை முறையில் சரி செய்து புதிய சாதனை படைத்துள்ளது இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் கூறுகையில்:-


அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவருக்கு இதயத்தில் பெரிய ஓட்டை இருப்பது கண்டறியப்பட்டது இதை சரி செய்வதற்கு திறந்த நிலை இதய அறுவை சிகிச்சை வழக்கமான செயல்பாடாக இருந்தது எனினும் திருச்சி காவேரி மருத்துவமனையில் அந்த சிறுமிக்கு புதுமையான செரா பிளாக்ஸ் செப்டல் அக்லூடர் என்ற அதிநவீன சிகிச்சை முறைக்கு தேர்வு செய்யப்பட்டார்.


குழந்தையின் இருதயத்தில் ஏற்பட்ட இந்த ஓட்டையை மூடுவதற்கு ஒரு புதுமையான செராப்ளக்ஸ் இடைச் சுவர் பல் பொருத்தி என்பதனை பயன்படுத்தி காவிரி ஆர்ட் சிட்டியின் குழந்தைகளுக்கான இதய இடையிட்டை சிகிச்சை குழுவினர் வெற்றிகரமாக அந்த அறுவை சிகிச்சை செய்து முடித்தனர் வர்த்தக ரீதியாக இந்த சாதனம் கிடைக்க பெற்றதற்கு பிறகு தெற்காசியாவில் முதன் முறையாக திருச்சி காவேரி ஹாட் சிட்டி மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்டுள்ளது

.மேலும் இது குறித்து இருதவியல் டாக்டர் மணி ராமகிருஷ்ணா கூறுகையில். இந்த சிறுமிக்கு இதய குறைபாடு ஓட்டை சரியாக மூடப்படுவதற்கு செராப்ளக்ஸ் சாதனம் பயன்படுத்தப்பட்டது எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் அந்த சிறுமி அடுத்த நாளே மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அடுத்த மூன்று நாட்களில் பள்ளிக்கு செல்லவும் முடிந்தது பிறவி இதய குறைபாடுகள் நோய்கள் ஏறக்குறைய ஆயிரம் குழந்தைகளில் ஒருவரை இதுபோன்று பாதிக்கிறது கடந்த மூன்று ஆண்டுகளில் 350 க்கும் அதிகமான இருதய இடையிட்டு சிகிச்சை செயல்முறைகளை திருச்சி காவிரி ஹாட் சிட்டி மருத்துவமனை மேற்கொண்டுள்ளது.


இந்த செராப்ளக்ஸ் சாதனத்தின் வெற்றிகரமான பயன்பாட்டின் மூலம் குழந்தைகளுக்கான இதயவியல் சிகிச்சையில் சிறப்பான சாதனையை நிகழ்த்தி இருப்பதில் நாங்கள் பெருமையும் உற்சாகம் கொள்கிறோம் என்றார் இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் அரவிந்த் குமார், பிரவீன் குமார், சாந்தி பொது மேலாளர் மாதவன் நித்திய தாஸ் மெடிக்கல் இயக்குனர் சுரேஷ் வெங்கிட்டா ஆகியோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments