NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பேரவை கூட்டத்திற்கு சென்று வந்த உறுப்பினருக்கு விபத்து

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பேரவை கூட்டத்திற்கு சென்று வந்த உறுப்பினருக்கு விபத்து

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அந்த வகையில் திருச்சி மாவட்டத்திலுள்ள  உறுப்பினர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சி முடிந்தவுடன், எக்மோர் ரயில் நிலையத்திற்கு ஆட்டோவின் மூலம் 5 உறுப்பினர்கள் சென்று உள்ளனர், அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்ட நிலையில், நாடக நடிகர் கண்ணன் அவர்களுக்கு கால் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது, மற்ற உறுப்பினர்களுக்கு பலத்த காயம் அடைந்தனர் .


உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன், நாடக நடிகர்கள் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் காப்பாளர் துணைத் தலைவர் பூச்சி முருகன் அவர்களுக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர் வழிகாட்டுதலின்படி அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அதனைத் தொடர்ந்து

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பூச்சி முருகன் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் திரைப்பட நடிகர் SI கார்த்திக் அவர்களின் அறிவுறுத்தலின்படி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மேலாளர் காமராஜ், தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய நிர்வாக குழு உறுப்பினர் மணப்பாறை நடிகர் பண்ணை சிங்காரம், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஏ ஆர் ஒ சிவா அவர்கள் உடனடியாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உதவியுடன் அவர்களை பாதுகாப்பாக ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு அனுப்பி வைத்தனர். பன்முக கலைஞர் நலவாழ்வு அமைப்பின் சார்பில் திருச்சி மாவட்ட த்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்...

மேலும் விபத்துக்கு உள்ளான நாடக நடிகர் கண்ணன் அவர்களிடம் தொடர்பு கொண்டு நடிகர் சங்கத்தின் வாயிலாக நலம் விசாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...

Post a Comment

0 Comments