BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** கொடைக்கானலில் பூத்து குலுங்கும் பைன் செட்டியா மலர்கள்

கொடைக்கானலில் பூத்து குலுங்கும் பைன் செட்டியா மலர்கள்

 திண்டுக்கல் கொடைக்கானலில் இரண்டாவது சீசனை முன்னிட்டு பூத்து குலுங்கும்  பைன் செட்டியா மலர்கள்.. சிவப்பு நிற மலர்களை கண்டு சுற்றுலா  பயணிகள் மகிழ்ச்சி ...


 மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் முதல் கட்ட சீசன் ஏப்ரல் மதம் துவங்கி மே ,ஜூன் மாதம் நிறைவடையும்.. இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள் .ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் இரண்டாவது சீசன் துவங்கி அக்டோபர், டிசம்பர் வரை நீடிக்கும் ..



தற்பொழுது கொடைக்கானலில் இரண்டாவது சீசனை முன்னிட்டு  கொடைக்கானலில், ஏரிச்சாலை, செண்பகனூர், பிரையன்ட் பூங்கா, செட்டியார் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிவப்பு நிறத்தில் இலை வடிவிலான இதழ்கள் கொண்ட பைன் செட்டியா மலர்கள்  பூத்துள்ளது .சுற்றுலா  பயணிகளின் கண்களுக்கு  விருந்தளிக்கும் விதமாக உள்ளது .இந்த சிவப்பு நிற  மலர்களை காண சுற்றுலா  பயணிகள்  எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Post a Comment

0 Comments