BREAKING NEWS *** "அளவற்ற வறுமையைத் தாண்டினார் எம்.ஜி.ஆர்" "கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார்" "தமிழக அரசியலின் அதிசயம் ஆனார் எம்.ஜி.ஆர்" "இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்" -த.வெ.க தலைவர் விஜய் *** ஹழ்ரத் முஹையத்தீன் அப்துல் காதர் ஜீலானி நினைவு விழாவினை முன்னிட்டு சந்தன உருஸ் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு

ஹழ்ரத் முஹையத்தீன் அப்துல் காதர் ஜீலானி நினைவு விழாவினை முன்னிட்டு சந்தன உருஸ் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு

 ஹழ்ரத் முஹையத்தீன் அப்துல் காதர் ஜீலானி நினைவு விழாவினை முன்னிட்டு சந்தன உருஸ் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.


திருச்சி அரியமங்கலம் கருணாநிதி தெரு பகுதியில் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக பழமை வாய்ந்த ஹழ்ரத் மஹபூபே சுபுஹானி நிஷான் ( கொடி மரம் ) சந்தன உருஸ் மற்றும் கொடி ஏற்ற நிகழ்வு இறைநேசப் பிரச்சார பேரவையின் அரியமங்கலம் பகுதி பொறுப்பாளர், தமிழக தர்காக்கள் சுன்னத் ஜமாத் மாநில செயலாளர் சௌபர் சாதிக்  தலைமையில் நடைபெற்றது. 



விழாவில் முன்னதாக அரியமங்கலம் கருணாநிதி நகர் முன்பிலிருந்து புனிதமிக்க தீன் கொடியை மேல தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர்சாதிக் பாட்சா பாவா கலந்து கொண்டு புனிதமிக்க தீன் கொடியை ஏற்றி சிறப்பித்தார்.







விழாவில் அகில இந்திய முஸ்லீம் லீக் மாநிலத் தலைவர் காஜா சாஹிப், தமிழக தர்காக்கள் சுன்னத் ஜமாத் மாநில தலைவர் ஜெகபர் சாதிக், செயலாளர் பஷீர், மற்றும் உலமாக்கள், அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Post a Comment

0 Comments