NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** ஹழ்ரத் முஹையத்தீன் அப்துல் காதர் ஜீலானி நினைவு விழாவினை முன்னிட்டு சந்தன உருஸ் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு

ஹழ்ரத் முஹையத்தீன் அப்துல் காதர் ஜீலானி நினைவு விழாவினை முன்னிட்டு சந்தன உருஸ் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு

 ஹழ்ரத் முஹையத்தீன் அப்துல் காதர் ஜீலானி நினைவு விழாவினை முன்னிட்டு சந்தன உருஸ் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.


திருச்சி அரியமங்கலம் கருணாநிதி தெரு பகுதியில் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக பழமை வாய்ந்த ஹழ்ரத் மஹபூபே சுபுஹானி நிஷான் ( கொடி மரம் ) சந்தன உருஸ் மற்றும் கொடி ஏற்ற நிகழ்வு இறைநேசப் பிரச்சார பேரவையின் அரியமங்கலம் பகுதி பொறுப்பாளர், தமிழக தர்காக்கள் சுன்னத் ஜமாத் மாநில செயலாளர் சௌபர் சாதிக்  தலைமையில் நடைபெற்றது. 



விழாவில் முன்னதாக அரியமங்கலம் கருணாநிதி நகர் முன்பிலிருந்து புனிதமிக்க தீன் கொடியை மேல தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர்சாதிக் பாட்சா பாவா கலந்து கொண்டு புனிதமிக்க தீன் கொடியை ஏற்றி சிறப்பித்தார்.







விழாவில் அகில இந்திய முஸ்லீம் லீக் மாநிலத் தலைவர் காஜா சாஹிப், தமிழக தர்காக்கள் சுன்னத் ஜமாத் மாநில தலைவர் ஜெகபர் சாதிக், செயலாளர் பஷீர், மற்றும் உலமாக்கள், அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Post a Comment

0 Comments