// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** திருச்சி தேசிய கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்

திருச்சி தேசிய கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்

திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் தேசியக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட 4 அலகுகள் திருச்சிராப்பள்ளி மேக்ஸி விஷன் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான கண் பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது.


கல்லூரி முதல்வர் முனைவர் கி.குமார் தலைமையேற்று கண் பரிசோதனை முகாமைத் தொடங்கி வைத்தார்.துணை முதல்வர் முனைவர் து.பிரசன்ன பாலாஜி அவர்கள் முன்னிலை வகித்தார்.நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் துரைசாமி மற்றும் முனைவர்  ஆகியோர் முகாமினை ஒருங்கிணைத்தனர் .1000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கண் பரிசோதனை முகாமில் பங்கேற்றனர்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments