// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சியில் சாலை பாதுகாப்பு வார விழா

திருச்சியில் சாலை பாதுகாப்பு வார விழா

திருச்சி ரெட்டைவாய்க்கால் அமிர்த வித்யாலயம் பள்ளியின் சார்பாக சாலை பாதுகாப்பு வார விழா இன்று வயலூர் ரோடு, ரங்கா நகர் சந்திப்பில்  பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் சார்பாக கொண்டாடப்பட்டது. 


இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக  இலவசமாக பேனா  வழங்கப்பட்டது.




இந்த நிகழ்ச்சியை பள்ளியின் முதல்வர் தஉஷா ராகவன் அவர்கள் துவக்கி வைத்தார். சாரண சாரணியர் மாணவர்களை சார்ந்த 70 பேர் கலந்து கொண்டனர்  ஹெல்மெட் அணிந்து வந்த 250 வாகன ஓட்டிகளுக்கு பேனா வழங்கப்பட்டன...

நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments