NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி உறையூர் மண்டல் பகுதியில் ஆர்.ஜி.ஆனந்த் சூறாவளி சுற்றுப்பயணம்

திருச்சி உறையூர் மண்டல் பகுதியில் ஆர்.ஜி.ஆனந்த் சூறாவளி சுற்றுப்பயணம்

 உறையூர் பூரண மண்டலம் ஆகிறது - பாஜக திருச்சி நாடாளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர்  ஆர்.ஜி.ஆனந்த் சூறாவளி சுற்றுப்பயணம் 


பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், திருச்சி நாடாளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகள் பொதுமக்களை சந்தித்து ஊக்கப்படுத்தி வருகிறார். 




அந்த வகையில் இன்று திருச்சி உறையூர் மண்டல் பகுதியில் "ஆர்.ஜி.ஆனந்த் உடன் இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்" என்ற தலைப்பில் 17 சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், 6 வார்டு தலைவர்கள், 16 பயனாளிகள் ஆகியோரை அவர்களது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து, அவர்களது கட்சி பணியை பாராட்டி பொன்னாடை போர்த்தி கவுரவித்து,  ஊக்கப்படுத்தி ஒரு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.















 தொடர்ந்து தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசித்து, அவர்களின் பகுதிகளில் அதிகப்படியான சுவர் ஓவியம் வரைய ஆலோசனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் உறையூர் மண்டல் தலைவர் மற்றும் நிர்வாகிகள் பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments