NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி TNTJ சார்பில் பேரணி ஆர்ப்பாட்டம்

வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி TNTJ சார்பில் பேரணி ஆர்ப்பாட்டம்

1999 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும், அனைத்து மதங்களின் வழிபாட்டு தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் மேலும் இஸ்லாமிய மக்களுக்கு மற்றும் இஸ்லாமிய பள்ளிவாசல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாநில செயலாளர் பைசல் தலைமையில் பாலக்கரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்திய நாடு மதச்சார்பற்ற நாடாக விளங்க வேண்டும் எல்லோரும் அதைத்தான் விரும்புகிறார்கள் என்றும், ஒரு சமுதாயத்திற்கு மட்டும் அணு அநீதி இழைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் அதே நேரம் தற்போது காலங்களின் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் ஒருதலைப் பட்சமாக உள்ளது ஜனநாயக மாண்பை நீதிமன்றங்கள் காக்க வேண்டும் அதற்கு உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என மாநிலச் செயலாளர் பைசல் வலியுறுத்தினார்..


இதில் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர்


Post a Comment

0 Comments