BREAKING NEWS *** டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரிய பொதுநல மனு தள்ளுபடி மனுதாரருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம் *** மாநில விருது பெற்ற மாணவிக்கு மகளிர் தின விழாவில் பாராட்டு

மாநில விருது பெற்ற மாணவிக்கு மகளிர் தின விழாவில் பாராட்டு

திருச்சி வ. வே. சு. ஐயர் நினைவு இல்லத்தில் உள்ள வரகனேரி கிளை நூலகத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு வாசிப்பை நேசிப்போம் என்கிற தலைப்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த‌ நிகழ்வில் தமிழக அரசின் பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது மற்றும் ரொக்கப் பரிசு ரூ.1 லட்சம் பெற்ற மாணவி மோ.பி. சுகிதாவை பாராட்டி பரிசளிக்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் என்கிரிஷ் அறக்கட்டளை வரகனேரி. என். கே.ரவிச்சந்திரன், நூலகர். செந்தில்குமார், பேராசிரியர் எம். ஆர்.அசோகன், எஸ்.அருணா, ஆசிரியர் க.மாரிமுத்து மற்றும் என்கிரிஷ் அறக்கட்டளை நிர்வாகி சதீஸ் சுகன்யா மற்றும் வாசகர் வட்டத்தினர் பொதுமக்கள், மாணவ மாணவிகள். கலந்து கொண்டு பாராட்டினார்கள்.

விழாவில் பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பட்டி மன்றம், கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் மற்றும் ஓவியம் வரைந்த மாணவிகள் அனைவருக்கும் என்.கே. ரவிசந்திரன் சார்பாக திருக்குறள் புத்தகம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்பட்டது.

Post a Comment

0 Comments