காவேரி குழும மருத்துவமனைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக அமைக்கப்படடுள்ள 200 படுக்கைகள் கொண்ட அதி நவீன மருத்துவ மனையான மா காவேரி திறப்பு விழா நடைபெற்றது. நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என் .நேரு மருத்துவமனையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
இந்த விழாவில் மாநகராட்சி மேயர் அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழாவிற்கு காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் டாக்டர் எஸ் சந்திரகுமார், காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ். மணி வண்ணன். காவேரி குழும மருத்துவ மனைகளின்இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குனரும், தலைமை குழந்தைகள் நல மருத்துவருமான டாக்டர். டி செங்குட்டுவன் ஆகியோர் தலைமை தாங்கினார் .
கடந்த 25 ஆண்டுகளாக நமது குழந்தைகள் நலத்துறை மற்றும் மகளிர் மருத்துவ துறையின் பயணம் குறிப்பிடத்தக்கது. மிகவும் மரியாதைக்குரிய மற்றும் நம்பகமான சுகாதார வழங்குநராக இருக்க வேண்டும் என்ற எங்கள் பார்வைக்கு இணங்க, மா காவேரியில் அதிந வீன தொழில்நுட்பம் மற்றும் உயர் பயிற்சி பெற்ற நிபுணர் குழுவின் சேவை 24 மணி நேரமும் கிடைக்கும். குழந்தை மருத்துவ பிரிவில் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, குழந்தை புற்றுநோ யியல், குழந்தை இரைப்பை குடல், குழந்தை சிறுநீரகவியல் மற்றும் நியோனாட்டாலஜி போன் ற சேவைகள் உள்ளன. குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைக்கான பிரத்யேக 11 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவு,16 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு,10 படுக்கைகள் கொண்ட தீவிர கண்காணிப்பு பிரிவு,50 படுக்கைகள் கொண்ட பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் 5 படுக்கைக ள் கொண்ட எலும்பு மஜ்ஜை, கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறப் பு பிரிவு ஆகியவை இந்த மருத்துவமனையில் உள்ளன.
இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குனரும், தலைமை குழந்தைகள் நல மருத்துவருமான டாக்டர். டி செங்குட்டுவன் கூறும்போது,
"மா காவேரி மூலம் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடும்பங்கள் உய ர்தர குழந்தை நல சிகிச்சைக்காக வேறு நகரங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. எங்கள் மருத்துவமனை விரிவான சிகிச்சை வசதிகளை அளிக்கிறது. உங்கள் வீட்டிற்கு அருகி லேயே எங்கள் குழந்தை நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சேவையை உறுதி செய்கிறது என்றார்.
காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ். மணி வண்ணன் கூறும் போது, பெண்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். "மா காவேரி மூலம், பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் விரிவான சிகிச்சையைப் பெறும் புகலிடத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். அதிக ஆபத்துள்ள கர்ப்பங்கள் முதல் மேம்பட்ட மகளிர் மருத்துவ அறுவை சிகிச்சைகள் வரை, உயர்தர மருத்துவ பராமரிப் புடன் பெண்களுக்கு ஆதரவளிப்பதே எங்கள் குறிக்கோள்" என்றார்.
0 Comments