NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** கோடை விடுமுறைக்கு பின் இன்று அரசு பள்ளிகளில் வகுப்புகள் துவக்கம் - மாணவிகளுக்கு முதல் நாளே புத்தகம் வழங்கப்பட்டது

கோடை விடுமுறைக்கு பின் இன்று அரசு பள்ளிகளில் வகுப்புகள் துவக்கம் - மாணவிகளுக்கு முதல் நாளே புத்தகம் வழங்கப்பட்டது

 கோடை விடுமுறைக்கு பின் இன்று அரசு  பள்ளிகளில் வகுப்புகள் துவக்கம் - மாணவிகளுக்கு முதல் நாளே புத்தகம் வழங்கப்பட்டது .


தமிழக முழுவதும் கோடை விடுமுறை முடிந்து 45 நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.


மாணவர்களை வரவேற்பதற்காக ஆர்வமுடன் பள்ளியில் காத்திருந்த ஆசிரியர்கள் - 8 மணிக்கு முன்பாகவே பள்ளிகளுக்கு ஆர்வமுடன் வருகை தரும் மாணவர்கள்.


பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறந்து மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கும் ஆனால் இந்த ஆண்டு கடுமையான வெயிலின் தாக்கம் இருந்ததால் ஜூன் 10ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது அந்த வகையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் துவங்கி உள்ளது



பள்ளிகள் வகுப்பறைகள் அனைத்தும் கடந்த வாரமே தூய்மை செய்யப்பட்டு மாணவிகளுக்கு இன்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து பிரைமரி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கப்படும் இலவச புத்தகம் நோட்டு இன்றைய தினமே வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments