BREAKING NEWS *** பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து பிரதமர் பதவியையும், கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார் ரிஷி சுனக். *** ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை முடிக்க திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை முடிக்க திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

 வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை முடிக்க திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மத்திய பேருந்து நிலையம் முக்கிய பேருந்து நிலையமாக இருந்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கம், போக்குவரத்து நெரிசல் , மாநகர் பகுதி விரிவாக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்டு பஞ்சப்பூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது.



243.78 கோடி செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம், 106.20 கோடி ரூபாயில் கனரக சரக்கு வாகன முனையம் கட்டும் பணி , சாலைகள், மழைநீர் வடிக்கால் , மற்றும் உள்கட்டமைப்பு வசதி, நகரும் படிக்கட்டுகள், ஏசி அறைகள், இரண்டு அடுக்கு தளங்கள், என அதி நவீன வசதிகளுடன் என மொத்த சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது.



திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகர மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர் .

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய  தமிழ்நாடு  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு :-

                                       


வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இன்று மாலை மாநகராட்சி மேயர், ஆணையர் இருவரும் ஒப்பந்த தொழிலாளர்களை அழைத்து பணிகளை விரைவில் முடிக்க ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.


திருச்சி விமான நிலையத்தில் இரண்டாவது புதிய முனையத்தை சென்று ஆய்வு செய்தது குறித்த கேள்விக்கு.... குடிநீர் வசதி உள்ளிட்டவைகள் செய்யப்பட்டுள்ளவை. மேலும் முக்கிய பிரமுகர்கள் வருகை மற்றும் புறப்பாடு செல்லும் பாதைகளை நேரில் சென்று பார்த்து பேசி அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளளேன்.

 உங்களுடைய மகன் அருண் நேரு பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தந்தையாக நீங்கள் அவருக்கு சொல்லும் அறிவுரை என்ன என்று கேட்ட பொழுது.

அது தனியாக பேசிக்கொள்ளலாம் என பதிலளித்துவிட்டு சென்றார்.

Post a Comment

0 Comments