வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை முடிக்க திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மத்திய பேருந்து நிலையம் முக்கிய பேருந்து நிலையமாக இருந்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கம், போக்குவரத்து நெரிசல் , மாநகர் பகுதி விரிவாக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்டு பஞ்சப்பூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது.
243.78 கோடி செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம், 106.20 கோடி ரூபாயில் கனரக சரக்கு வாகன முனையம் கட்டும் பணி , சாலைகள், மழைநீர் வடிக்கால் , மற்றும் உள்கட்டமைப்பு வசதி, நகரும் படிக்கட்டுகள், ஏசி அறைகள், இரண்டு அடுக்கு தளங்கள், என அதி நவீன வசதிகளுடன் என மொத்த சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு :-
உங்களுடைய மகன் அருண் நேரு பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தந்தையாக நீங்கள் அவருக்கு சொல்லும் அறிவுரை என்ன என்று கேட்ட பொழுது.
அது தனியாக பேசிக்கொள்ளலாம் என பதிலளித்துவிட்டு சென்றார்.
0 Comments