காணாமல் ஆக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவருக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்கிய தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்... அதில் கூறுகையில்..
கடந்த வாரம் இலங்கை கடற்படை தாக்குதலில் கொல்லப்பட்ட மீனவர் ராமசாமிக்கு பத்து லட்சம் நிவாரணத்தை தமிழக அரசு அறிவித்தது.
அன்றே இலங்கை கடற்படையால் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றொரு மீனவர் ராமச்சந்திரன் குடும்பத்திற்கும் பத்து லட்சம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசீய கூட்டணி சார்பில் கே.எம.செரீப், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,
அதே போல தமிழக முதல்வர் அவர்களுக்கும் கோரிக்கை வைத்தோம். எங்களோடு தமிழக வாழ்வுரிமை கட்சி, SDPI அமைப்புகளும் இதே கோரிக்கையை அரசிடம் முன்வைத்தன. எங்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தற்போது காணாமல் ஆக்கப்பட்ட மீனவர் ராமச்சந்திரன் குடும்பத்திற்கும் பத்து லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது வரவேற்க தக்கதாகும்
எங்களின் மற்றொரு கோரிக்கையான மீனவர் படுகொலைக்கு வழக்கு பதிவு செய்ய வேண்டும் - அதுவும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதையும் தமிழக அரசு ஏற்று வழக்கு பதிய வேண்டும் எனவும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் அரசிற்கு முன்வைக்கிறேன் என அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
0 Comments