கேரளா மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெற்ற தடகள விளையாட்டு போட்டிகளில் தங்கம் வெள்ளி வெண்கலம் வென்ற திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த செப்டம்பர் 22 முதல்26 வரை தேசிய அளவிலான கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
தமிழ்நாடு நுகர்வோர் பெடரேஷன் தலைவர் சிவசங்கர் சேகரன் ஒயிட் ரோஸ் பொதுநல சேவை அமைப்பின் தலைவர் சங்கர் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் & தின சேவை அறக்கட்டளையின் நிர்வாகி சிவபிரகாசம் கண்ணன் அமிர்தம் அறக்கட்டளை தலைவர் யோகா விஜயகுமார் பெட்காட் அமைப்பின் செயலாளர் கார்த்தி டேனியல் சாக்ஸிடு அமைப்பின் ஆலோசகர் சசி மண்ணுக்கும் மக்களுக்கும் அமைப்பின் திருச்சி கிளை ஒருங்கிணைப்பாளர் கேசவன் மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் விளையாட்டு பிரிவு இணை செயலாளர் வழக்கறிஞர் ஆறுமுகம் மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா மாற்றம் அமைப்பின் நிறுவன தலைவரும் தேசிய மாநில அளவில் விருதுகள் பெற்ற குறும்படத்தின் நடிகரும் இயக்குனருமான ஆர்.ஏ.தாமஸ் மற்றும் திரளான விளையாட்டு வீரர்கள் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்
0 Comments