NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி வேலன் மருத்துவ குழுமத்தின் சார்பில் நவீன தோல் மற்றும் முடிசிகிச்சைகான மருத்துவ மனை திறப்பு விழா

திருச்சி வேலன் மருத்துவ குழுமத்தின் சார்பில் நவீன தோல் மற்றும் முடிசிகிச்சைகான மருத்துவ மனை திறப்பு விழா

திருச்சி வேலன் மருத்துவ குழுமத்தின் சார்பில் நவீன தோல் மற்றும் முடிசிகிச்சைகான மருத்துவ மனை திறப்பு விழா நடைபெற்றது.திருச்சி கண்டோன்மென்ட் வார்னஸ் சாலையில் வேலன் மருத்துவ குழுமத்தின் சார்பில்  தோல் மற்றும்  தலைமுடியின் சிறப்பு சிகிச்சைகான சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டது.


இந்த மருத்துவமனையில் லேசர் சிகிச்சை மூலம் தேவையற்ற முடிகள்,முகப்பறு மற்றும் முகத்தில் உள்ள வடுக்கள், பச்சை குறிகளை நீக்கம் செய்து அதிநவீன சிகிச்சை அழிக்கப் படுகிறது. 


மேம்பட்ட அழகுக்கு தோல் மருத்துவ தேவைகள் ரசாயன சிகிச்சைகள் ஸ்டெம் செல் சிகிச்சை, பொதுவாக தோல் சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்ற எக்ஸினேநமோ / ஒவ்வாமைக்கும் பலதரப்பட்ட நவீன உலகத்தரம் வாய்ந்த நவீன சிகிச்சைகள் இங்கு வழங்கப் பட உள்ளது என்று இந்த மருத்துவமனையின் தோல் மருத்துவம், மற்றும் அழகு சாதன நிபுணர் டாக்டர் K.அகிலா அவர்கள் தெரிவித்தார். 


இந்த விழாவில் தினமலர் ஆசிரியர் திரு. ராமசுப்பு அவர்களும் ,வேலன் குழுமத்தின் தலைவர் தொழிலதிபர் கண்ணையன், வேலன் மருத்துவ மனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ராஜவேல் சிசிச்சை மைய இயக்குநர் மற்றும் பலர் கலந்து கொண்டார்

Post a Comment

0 Comments