NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** வ.உ.சி சிலைக்கு திருச்சி அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

வ.உ.சி சிலைக்கு திருச்சி அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.. 

இதன் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளர்,  சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க,அதிமுக அமைப்பு செயலாளர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் P.தங்கமணி MLA அவர்களின் அறிவுறுத்தலின்படி..


சுதந்திரப் போராட்ட தியாகி, செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 88-வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர், 



முன்னாள் துணை மேயர், ஜெ.சீனிவாசன் அவர்கள் தலைமையில் திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே அமைந்துள்ள வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது





இந்த நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments