தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை துறையின் புதிய நிர்வாகியாக திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக பஜார் மைதீன் நியமனம் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கும், நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் .தமிழக காங்கிரஸ் கட்சியில் திருச்சியில் பல ஆண்டுகளாக பஜார் மைதீன் செயல்பட்டு வந்தார் .
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை தலைவர் இம்ரான் பிரதாப் கர்த்தி அவர்களுக்கும் பரிந்துரை செய்த தமிழக பொறுப்பாளர் நஜ்முல் ஹாமர் இஸ்லாம் மாநிலத் துணைத் தலைவர் Dr.M.முஹம்மது முகைய்யதீன் மற்றும் மாநில பொது செயலாளர் வழக்கறிஞர் M.சரவணன், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு என்கின்ற M.லெனின் பிரசாத், நியமனம் செய்த தமிழக மாநில தலைவர் "பாரத் யாத்திரி" ஜனாப்.H. முகமது ஆரிஃப் ஆகியோர் பரிந்துரை மற்றும் வழிகாட்டுதல் படி பஜார் மைதீனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.
பொறுப்பு வழங்கிய காங்கிரஸ் மேலிடத்திற்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் மொய்தீன் பிச்சை என்கின்ற பஜார் A.மைதீன். திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டார்
0 Comments