NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** வ.உ.சி சிலைக்கு திருச்சி தேமுதிக மாநகர் மாவட்டம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

வ.உ.சி சிலைக்கு திருச்சி தேமுதிக மாநகர் மாவட்டம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

 சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.. 


இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் திருச்சி நீதிமன்றம் அருகேயுள்ள வ.உ.சி.உருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.. 



இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கலைப்புலி பாண்டியன், மாநில தொண்டர் அணி வெல சாகுல், பொருளாளர் மில்டன்குமார், துணைச் செயலாளர் பிரீத்தா விஜய் ஆனந்த் ,பகுதி செயலாளர் என்.எஸ்.எம் மணிகண்டன் உள்பட பலர் உள்ளனர்.

Post a Comment

0 Comments