NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி உறையூரில் சமத்துவ பொங்கல் விழா பகுதி செயலாளர் நாகராஜ் பங்கேற்பு

திருச்சி உறையூரில் சமத்துவ பொங்கல் விழா பகுதி செயலாளர் நாகராஜ் பங்கேற்பு

 திருச்சி உறையூர் ராமலிங்க நகர் நெசவாளர் காலனியில் 6 ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் அப்பகுதி பொதுமக்கள் கரும்பு தோரணம் கட்டி, பாரம்பரிய உடை அணிந்து, மண் பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.  


இதில் திமுக தில்லைநகர் பகுதி செயலாளரும், கவுன்சிலருமான கொடாப்பு நாகராஜ் கலந்து கொண்டு பொது மக்களுடன் இணைந்து  பொங்கல் வைத்து கொண்டாடினார்.


 மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு வகையான  விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 


இந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை திமுக கலை இலக்கியப் பிரிவு மாநகர துணை அமைப்பாளர் கமல், சந்திர சேகர், RNR பிரதர்ஸ் மற்றும் விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments