இந்தியாவில் நிதி சேவைகளின் அணுகுமுறையை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமாக, எலக்ட்ரானிக் பேமெண்ட் அண்ட் சர்வீசஸ் (EPS) நிறுவனம் eps BANCS™ (Bharat ATM Network for Customer Service) என்ற தனது வெள்ளை லேபிள் ஏடிஎம் (WLA) மையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சியின் முதல் கட்டமாக திருச்சி, ஜெய்ப்பூர், ஹுப்லி மற்றும் மும்பை போன்ற இடங்களில் வெள்ளை லேபிள் ஏடிஎம் (WLA) மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய வங்கி சேவைகளைப் புரட்சிகரமாக மாற்றும் நிறுவனத்தின் தாராளத்தன்மை வெளிப்படுகிறது.
இதில் திருச்சியில் திருவானைக்காவல் மேற்கு கோபுர வாசல் அருகே இந்த ஏ.டி.எம் நிறுவப்பட்டு, நேற்று முதல் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இது குறித்து EPS நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மணி மாமல்லன் செய்தியாளர்களிடம் கூறுகையில்....
“எங்கள் இலக்கு டிஜிட்டல் பாகுபாட்டை அகற்றவும், வங்கி கிளைகள் இல்லாத இடங்களில் வங்கி சேவையின் அடையாளமாக மாறுவதும் ஆகும். eps BANCS™ வெள்ளை லேபிள் ஏடிஎம்கள் வெறும் பணம் எடுக்கும் இயந்திரங்களாக அல்லாமல், எல்லாவித சேவைகளையும் வழங்கும் ஒருங்கிணைந்த மையங்களாக செயல்படும். வங்கிக் கிளைகள் குறைவான இடங்களில் இந்த மையங்களை நிறுவுவதன் மூலம், நிதி சேவைகள் அனைத்திற்கும் எளிய, நம்பகமான மற்றும் திறமையான அணுகுமுறையை வழங்குவதே எங்கள் நோக்கம். இதில் சேர்க்கைமிகு நிதி சேவைகள் மற்றும் டிஜிட்டல் சேவைகளை ஒருங்கிணைத்து, சமுதாயங்களை அதிகாரமளித்து, மைக்ரோ-உற்பத்தியை ஊக்குவித்து, நிலையான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த விரும்புகிறோம். இந்தியாவின் டிஜிட்டல் பயணத்தில் யாரும் புறக்கணிக்கப்படுவதைத் தவிர்க்க முயற்சி செய்கிறோம் என்று தெரிவித்தார்.
0 Comments