எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தின் நிறுவனர் வேந்தர் டாக்டர் பாரிவேந்தரால் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்ப்பேராயம் தலைசிறந்த எண்ணற்ற தமிழ் பணிகளை ஆற்றி வருகிறது. தமிழ் அருட்சுனைஞர் சான்றிதழ் படிப்பு, வள்ளலார் சான்றிதழ் படிப்பு முதலானவற்றோடு பல இலட்சம் மதிப்பிலான தமிழ்ப்பேராய விருதுகள் வழங்குதல், அரிய நூல்களை வெளியிடுதல், பன்னாட்டு, தேசிய மாநாடுகளை ஒருங்கிணைத்தல் என பல்வேறு சிறந்த பணிகளை ஆற்றி வருகிறது.
தமிழ்ப்பேராயம் வழி மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்த பல ஆயிரம் மாணவர்களைக் கொண்ட பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது.அரும்பணிகள் பல ஆற்றிவரும் தமிழ்ப்பேராயம் இதன் தொடர்ச்சியாக கல்லூரி மாணவர்களுக்கான பேச்சாற்றலை அங்கீகரிக்கும் நோக்கத்தில் "சொல் தமிழா சொல் - 2025" என்னும் தலைப்பில் மிகப் பிரம்மாண்டமான பேச்சுப்போட்டியை தற்போது ஏற்பாடு செய்துள்ளது.
வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ் பேராயம் தலைவர் கரு.நாகராசன் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார். வெற்றியாளர்களில் முதல் நால்வர் மாநில அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர். போட்டிகளில் வென்றோருக்கான பரிசுத்தொகை மாநில அளவிலான இறுதிப்போட்டி அன்று வழங்கப்படும்.
0 Comments