NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** ஶ்ரீமத் ஆண்டவர் ஆசிரமத்தின் 12வது பீடாதிபதி ஶ்ரீ வராஹ மஹா தேசிகன் சுவாமிகள் முக்திநாத்-இல் மங்களாசாசனம்

ஶ்ரீமத் ஆண்டவர் ஆசிரமத்தின் 12வது பீடாதிபதி ஶ்ரீ வராஹ மஹா தேசிகன் சுவாமிகள் முக்திநாத்-இல் மங்களாசாசனம்

திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 12வது பீடாதிபதி ஶ்ரீ வராஹ மஹா தேசிகன் சுவாமிகள் குமரி முதல் இமயம் வரை  சாலகிராம யாத்திரையாக  பல்வேறு  கோவில்களுக்கு  சென்று மங்களாசாசனம் செய்து வருகிறார்

இந்த நிலையில் ஶ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தில் உள்ள எந்த சுவாமிகளும் செய்யாத  பயணமான  நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஶ்ரீ மூர்த்தி பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் மேற்கொண்டார்


108 வைணவ திவ்ய தேசங்களில், நேபாள நாட்டின் முஸ்தாங் மாவட்டத்தில் உள்ள முக்திநாத் ஸ்ரீமூர்த்தி கோயில் 70-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது


நேபாளம் முக்திநாத் ஶ்ரீ மூர்த்தி பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்வது என்பது சிரமமான காரியம்  இமயமலையில் முக்திநாத் பள்ளத்தாக்கில் 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த தலமாகும் அங்கு விமானம் மூலமாக தான் எளிதாக செல்ல முடியும் ஆனால் ஶ்ரீ வராஹ மஹா தேசிகன் சுவாமிகள்  மற்றும் அவரது சிஷ்யர்கள் சாலை மார்க்கமாக சென்று மூன்று நாட்கள் சாலகிராம யாத்திரையின்  முக்திநாத்-ல் மூன்று நாட்கள் தங்கி மங்களாசாசனம் செய்து வந்தனர் 

இன்று திருச்சி திருச்சி ஶ்ரீரங்கம் வந்த ஶ்ரீ வராஹ மஹா தேசிகன் சுவாமிகள் ஶ்ரீரங்கநாதரை தரிசனம் செய்து பொதுமக்களுக்கு ஆசி வழங்கினார்

Post a Comment

0 Comments