NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சியைச் சேர்ந்த மாணவிகள் ஜார்ஜியா நாட்டில் நடைபெற்ற நடன போட்டிகளில் தங்கம் பதக்கம் வென்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

திருச்சியைச் சேர்ந்த மாணவிகள் ஜார்ஜியா நாட்டில் நடைபெற்ற நடன போட்டிகளில் தங்கம் பதக்கம் வென்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

திருச்சி மாவட்டம் திருவரம்பூரை அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்த மாஸ் சாம்ஸ் டான்ஸ் அகாடமி சார்பில் கடந்த 1 தேதி முதல் 5 ஆம் தேதி வரை ஜார்ஜியா நாட்டில் உள்ள திபிலிசி என்ற மாகாணத்தில் நடைபெற்ற கப் ஆஃப் காஸ்டஸ் 2025 15 - வது சர்வதேச திருவிழாவில்  நடைபெற்ற நடன போட்டியில் 11 முதல் 16 வயதிற்கு உட்பட்ட 12 மாணவ மாணவிகள் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளனர். 

5 முதல் 16 வயது வரையும் 16 வயது முதல் 25 வயது வரையும் 26 வயது முதல் அதற்கு மேல் வயது உள்ளவர்கள் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த போட்டிகள் நடைபெற்றது 


அதில் இந்திய நாட்டின் சார்பில் தமிழகம் குறிப்பாக திருச்சி கட்டுரை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்று கட்டையாட்டம் காவடியாட்டம் ஒயிலாட்டம் கரகாட்டம் ஜிக்கு ஆட்டம் போன்றவற்றில் நடனமாடி ஒட்டுமொத்த தங்கப் பதக்கத்தை பெற்று வந்துள்ளனர்


ஜார்ஜியா நாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் பல்கேரியா, அர்மேனியா, ஆஸ்திரியா, செக்குடியரசு,  உக்ரைன், பெல்லாரஷ், அசர்பெய்ஜான், ஹங்கேரி போன்ற பல்வேறு நாடுகளில் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்ற போட்டியில் திருச்சியை சேர்ந்த மாணவ மாணவிகள்  பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்று வந்துள்ளனர். 

இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரை மாணவ மாணவிகள் தங்கப்பதக்கத்துடன் வந்து சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Post a Comment

0 Comments