NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் சிறப்பு பூஜை, அன்னதானம், பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இதனை முன்னிட்டு திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் சிறப்பு அபிஷேகம் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. 


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராஜசேகர், பகுதி செயலாளர் பூபதி, வாசுதேவன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த், பேரவை மாவட்ட இணை செயலாளர் பொன்னார், வழக்கறிஞர் இணை செயலாளர் கௌசல்யா, 

வட்ட செயலாளர் முருகன், கல்லுக்குழி ரமேஷ், தகவல் தொழில்நுட்பம் பிரிவு கார்த்திகேயன் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments