// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு திராவிட கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு திராவிட கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு திராவிட கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை ...பகுத்தறிவு பகலவன், பெண் உரிமை போராளி தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திராவிட கழகம் சார்பில் பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது 

 


தந்தை பெரியாரின் 52 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திராவிட கழகம் மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் மாணவரணி தலைவர் அறிவுச் சுடர், பொதுக் குழு உறுப்பினர் முத்து, மாநகர் தலைவர் ராமதாஸ்,மாநகர் விடுதலை ஏஜெண்ட் விடுதலை நாளிதழ் செல்வம், மகளிர் பாசறை தலைவர் ரூபியா ஸ்டாலின்,  பொன்னுச்சாமி  நிர்வாகிகள் உள்பட பலர்  கலந்து கொண்டனர். .

Post a Comment

0 Comments