// NEWS UPDATE *** 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேமுதிக விருப்பமனு விநியோகம் இன்றுடன் நிறைவு பெற இருந்த நிலையில் 3 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு வரும் 15ம் தேதிக்குள் விருப்பமனுக்களை தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தல் *** அரியலூர் மாவட்டத்தில் புதிய கிளையை தொடங்கிய ஸ்டார் ஹெல்த் & அலையட் இன்சூரன்ஸ் நிறுவனம்!

அரியலூர் மாவட்டத்தில் புதிய கிளையை தொடங்கிய ஸ்டார் ஹெல்த் & அலையட் இன்சூரன்ஸ் நிறுவனம்!

இந்தியாவின் முன்னணி தனியார் சுகாதார காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் & அலையட் இன்சூரன்ஸ், அரியலூர் மாவட்டத்தில் தனது புதிய கிளையை தொடங்கியுள்ளது. இந்த தொடக்க விழாவில் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸின் மண்டல மேலாளர் அசோக் மற்றும் அரியலூர் கோல்டன் ஹாஸ்பிட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மருத்துவர் கண்மணி  ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி கிளையை திறந்து வைத்தனர்.

நிகழ்வில் தொடர்ந்து பேசிய திருச்சி மண்டல மேலாளர் அசோக், கடந்த ஆண்டின் வணிக வளர்ச்சி, தீர்வு செய்யப்பட்ட கோரிக்கைகள், முகவர் வலிமை, நெட்வொர்க் மருத்துவமனைகளின் விரிவாக்கம், வாடிக்கையாளர் மைய நலத்திட்டங்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து சுருக்கமாக எடுத்துரைத்தார். நிறுவனத்தின் அடிப்படை நோக்கத்தை மீண்டும் வலியுறுத்திய அவர் 

“வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து கொண்டு, தரமான சுகாதார காப்பீட்டு சேவைகளை எளிதாக, கிளை மட்டத்தில் வழங்குவதே ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் முக்கிய இலக்காக உள்ளது” என்று தெரிவித்தார்.






நடப்பு நிதியாண்டில், திருச்சி மண்டலம் மொத்தம் 11,685 கோரிக்கைகளை ₹82 கோடி மதிப்பில் வெற்றிகரமாக தீர்வு செய்து, வாடிக்கையாளர்களுக்கு விரைவான மற்றும் நம்பகமான சேவையை வழங்கியுள்ளது. இதனுடன், ₹26.5 கோடி புதிய வணிகத்தையும் பெற்றுள்ளது.

விழா இறுதியில், பகுதி மேலாளர் திரு. வேலுசாமி நன்றி உரையாற்றி, விழாவில் பங்கேற்ற முக்கிய விருந்தினர்கள், ஊழியர்கள், முகவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார். அரியலூரில் புதிய கிளை தொடங்கப்பட்டதன் மூலம், திருச்சி மக்களுக்கு ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் நம்பகமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய சுகாதார பாதுகாப்பு சேவைகள் மேலும் அருகில் வந்து, அதன் சேவை வலையமைப்பும் வாடிக்கையாளர் அணுகலும் வலுப்பெறுகிறது.

Post a Comment

0 Comments