// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சியில் சூத்திரதாரி நூல் அறிமுக விழா

திருச்சியில் சூத்திரதாரி நூல் அறிமுக விழா

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில் திருச்சி புத்தகத் திருவிழா 2026  வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. 


திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் அரங்கு எண்17 இல் எழுத்தாளர் சதாசிவம் எழுதிய சூத்திரதாரி நூல் அறிமுக விழா  நடைபெற்றது. எழுத்தாளர் சதாசிவம் சூத்திரதாரி நூலை அறிமுகப்படுத்த ,திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க செயலர் விஜயகுமார்,  தொட்டியம் தமிழ்ப் பேரவைத் தலைவர் இல. மணி சேகர், எழுத்தாளர் தமிழகன்  உட்பட பல்வேறு எழுத்தாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments