திருச்சி நத்தர்ஷா தர்கா சந்தனக்கூடு விழாவிற்கு உள்ளூர் விடுமுறை கேட்டு கோரிக்கை மனு அளித்தனர் ..தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் திருச்சியில் புகழ்பெற்ற நத்தர்ஷா தர்காவில் வருடம் ஒருமுறை சந்தனக்கூடு விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் .இந்த விழாவில் மத பாகுபாடுயின்றி அனைத்து மதத்தினரும் வந்து வழிபட்டு செல்கின்றனர்,
மேலும் தமிழக மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் இங்கு வழிபாடு செய்ய வருகின்றனர்.குறிப்பாக சந்தனக்கூடு விழா அன்று பெரும்பாலான மக்கள் சந்தனக்கூடு விழாவை காண்பதற்கு கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் வருகின்றனர்.புகழ்பெற்ற மத வழிபாட்டு தலங்களில் நடைபெறும் விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.இதே போல் இந்த விழா வருகிற 4-ம் தேதி 1029 வது.சந்தனக்கூடு விழா நடைபெற உள்ளது.



0 Comments