// NEWS UPDATE *** தவெக ஆட்சி அமைக்க தனது ஆதரவு கடிதத்தை வழங்கியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.. *** 29 வது வார்டு திமுக வேட்பாளர் கமால் முஸ்தபா தீவிர பிரச்சாரம்

29 வது வார்டு திமுக வேட்பாளர் கமால் முஸ்தபா தீவிர பிரச்சாரம்

 29 வது வார்டு-திமுக வேட்பாளர் கமால் முஸ்தபா தீவிர பிரச்சாரம்


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 29 வது வார்டில் திமுக சார்பில் உதய சூரியன் சின்னத்தில் கமால் முஸ்தபா போட்டியிடுகிறார். இதையொட்டி தனது வார்டுக்குட்பட்ட  நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று 29 வது வார்டுக்குட்பட்ட ஆழ்வார் தோப்பு, அண்டகொண்டான் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக 

சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த வாக்கு சேகரிப்பின் போது வட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments