திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் உஷாராணி தென்னை மரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து தீவிர பிரச்சாரம்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. திருச்சி மாநகராட்சி 46 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக P. உஷாராணி களமிறங்கியுள்ளார்
இவர் கடந்த மூன்று முறை கவுன்சிலராக வெற்றி பெற்று மக்கள் பணி ஆற்றியுள்ளார். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்த உஷாராணி தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று தனது 46 வது வார்டுக்குட்பட்ட உடையார் தெரு, கொடிமரத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி தென்னைமர சின்னத்திற்கு வாக்கு சேகரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
0 Comments