தமிழகம் முழுவதும் நேற்றும் இன்றும் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து தொழிற் சங்கத்தின் சார்பில் மறியல், கண்டனப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசு தனியார் மயம் கொள்கையை கைவிட வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்து இருந்தனர்,....
அதன்படி இன்று 2 வது நாளாக நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே SDTU தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்... மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
0 Comments