// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** மது பாட்டில்களை வீட்டு அலங்கார பொருளாக மாற்றி மகளிர் தின விழாவில் காட்சிபடுத்திய கல்லூரி மாணவி...! அமைச்சர் சந்திர பிரியங்கா பாராட்டு

மது பாட்டில்களை வீட்டு அலங்கார பொருளாக மாற்றி மகளிர் தின விழாவில் காட்சிபடுத்திய கல்லூரி மாணவி...! அமைச்சர் சந்திர பிரியங்கா பாராட்டு

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில்  மதுபாட்டிலை  கொண்டு வீட்டு அலங்காரப் பொருட்களாக மாற்றி மகளிர் தினவிழாவில் காட்சிப்படுத்திய அரசு கல்லூரி மாணவி அமைச்சர் சந்திர பிரியங்கா பாராட்டு


இன்று உலகம் முழுவதும் பெண்கள் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டத்தில் இன்று புதுச்சேரி அரசின்  மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது குழந்தைகள் நல திட்ட அதிகாரி சத்யா தலைமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சந்திரபாகா மற்றும் துணை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ் இதில் கலந்து கொண்டனர்.





மேலும் ஏராளமான கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்கள் கலந்து கொண்டு அவர்களின் திறமையை வெளிப்படுத்தினர் அதில் முக்கியமாக காரைக்கால் பச்சூர் பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவரின் மகள் ஃபெமினா (21) என்பவர் அரசு முதலாமாண்டு கல்லூரியைச் சேர்ந்தவர் மது பாட்டில் கொண்டு பல்வேறு வீட்டு அலங்காரப் பொருட்களாக மாற்றி காட்சிப்படுத்தினார்.




 இதை அனைவரும் கவர்ந்த நிலையில் அதை கண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா வெகுவாக பாராட்டி அவர் கிரீடம் போல் அணிவித்து மகிழ்ச்சி அடைந்தார்.. மேலும் மாணவி கூறுகையில்..... கொரோனா ஊரடங்கு போது அவர் வசித்த பகுதியில் அதிக மது பாட்டில்கள் உடைக்கப்பட்டு கிடந்தது இதனை கண்ட அவர் மது பாட்டில்களை வீட்டிற்கு அவ்வப்போது எடுத்து வந்து அதனை சேகரித்து வீட்டு அலங்காரப் பொருட்களாக மாற்றி வந்தார் மேலும் இதனால் மதுபாட்டில்களை உடைக்காமல் இருப்பதற்கும் மது குடிக்காமல் இருப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்

Post a Comment

0 Comments