கர்நாடகாவில் கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது...இந்த தீர்ப்பு பல்வேறு தரப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது....
இத்தீர்ப்பில் ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை செல்லும் எனவும் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மார்க்கத்தில் கடைபிடிக்க வேண்டிய அவசியமான கடமையில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளது.
இத்தீர்ப்பு நாட்டின் மதசுதந்திர உரிமையை பறிக்க முயலும் தீர்ப்பு, நாட்டின் மத சார்ப்பின்மைக்கு விடுகப்பட்டுள்ள சவால், தனிமனித உரிமையை பறிக்கும் தீர்ப்பு , இத்தீர்ப்பு இஸ்லாமியர்கள் மற்றும் ஜனநாயகத்தை பேண விரும்பும் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசமைப்புச் சட்ட அடிப்படையில் வழங்க வேண்டிய தீர்ப்பை மீறி தொடர்ந்து நீதிமன்றங்க ஃபாசிச அரசின் கொள்கையை பரப்பும் மன்றங்களாக மாறி வருகின்றன. இதற்கு கடந்த காலங்களில் கொடுக்கப்பட்ட பல தீர்ப்புகளே சாட்சியாக உள்ளன.
நீதிமன்றங்கள் இந்திய அரசமைப்புச் சட்டப்படி தீர்ப்பு வழங்கினால் மட்டுமே கட்டுபடுவார்கள். நீதிபதிகள் மனோஇச்சையின்படி வழங்கும் தீர்ப்புக்கு இந்தியர்கள் கட்டுபட மாட்டார்கள். இத்தீர்ப்பை ஒட்டு மொத்த முஸ்லிம்கள் நிராகரிப்பார்கள். மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பால் இத்தீர்ப்பை செயல்படுத்த முடியாத நிலையை ஏற்படும்.
இத்தீர்ப்பு நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கையை இழக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையை பெற ஜனநாயக வழியில் வலிமையான தொடர் போராட்டங்களை முன்னெடுப்பார்கள்.
0 Comments