திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில், வனத்துறையின் யானைகள் மறுவாழ்வு முகாமில் இன்று உலக வன நாள் விழாவினை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சு.சிவராசு, மாவட்ட வன அலுவலர் திரு.ஜி.கிரன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு, யானைகளுக்கு உணவு வழங்கி, மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் உதவி வனப்பாதுகாவலர் எஸ். சம்பத்குமார், வனச்சரகர்கள் வி.கோபிநாத்,ஆர். சரவணக்குமார், டி.முருகேசன், வட்டாட்சியர் எம்.சக்திவேல் முருகன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர் ....
0 Comments