புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி SRMU தொழிற்சங்கத்தினர் போராட்டம்
திருச்சி பொன்மலை ரயில்வே முன்பு SRMU ரயில்வே தொழிற்சங்கத்தின் சார்பில் SRMU பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில் மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தை கண்டித்து ரயில்வே தொழிலாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், கியாரண்டி பென்ஷன் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும், ரயில்வேத்துறை தனியார்மயத்தை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
0 Comments