BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** மனைவி தீயில் கருகி சாவு: கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய தூத்துக்குடி நீதிமன்றம்

மனைவி தீயில் கருகி சாவு: கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய தூத்துக்குடி நீதிமன்றம்

தூத்துக்குடியில் மனைவி தீயில் கருகி இறந்த வழக்கில், கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி இரண்டாவது மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது 

தூத்துக்குடி சாந்திநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சுடலைமணி (வயது 33). மினிபஸ் கண்டக்டர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இவருடைய மனைவி பார்வதி (32). சுடலைமணி அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவியிடம் தகராறு செய்து துன்புறுத்தி வந்தார். இதனால் பார்வதி மனம் உடைந்த காணப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 29.6.16 அன்று பார்வதி வீட்டில் தீயில் கருகிய நிலையில் கிடந்தார். பின்னர் அவர் அரசுஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடலைமணியை கைது செய்தனர்.


இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையில், சுடலைமணி, அவரது மனைவியை தற்கொலைக்கு தூண்டியது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி பிலிப் அலெக்ஸ் நிக்கோலஸ், குற்றம் சாட்டப்பட்ட சுடலைமணிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சேவியர் ஞானபிரகாசம் ஆஜர் ஆனார்.

இவ்வழக்கு தொடர்பாக விசாரனணக்கு உதவியாக இருந்ததென்பாக காவல் நிலைய காவலர் பன்னீர்செல்வம் விசாரணைக்குஉதவியாக இருந்தார்

Post a Comment

0 Comments