BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** திருச்சி வேங்கூர் ஊராட்சி மன்றத்தில் காலியாக உள்ள துணை தலைவர் பதவியை தேர்வு செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வார்டு உறுப்பினர்கள் மனு

திருச்சி வேங்கூர் ஊராட்சி மன்றத்தில் காலியாக உள்ள துணை தலைவர் பதவியை தேர்வு செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வார்டு உறுப்பினர்கள் மனு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கூர் ஊராட்சியை சார்ந்த வார்டு உறுப்பினர்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்....

அந்த மனுவில்:

திருச்சி  திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கூர் ஊராட்சியில் மொத்தம் 6 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் வேங்கூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் 6-வது வார்டு உறுப்பினர்  மணிகண்டன் என்பவர் கடந்த 06.01.2022ம் தேதி ராஜினமா செய்துவிட்டார்....

துணைத்தலைவர் பதவி வெற்றிடமாக உள்ளது. இன்று வரை துணைத்தலைவர் கிடையாது. அன்றுமுதல் இன்று வரை ஊராட்சி கூட்டம் நடைபெறுவதே இல்லை. இதனால் மக்கள் நல பணிகளும் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து வட்டாட்சியர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி உதவி இயக்குநர் ஆகியோரிடம் புகார் கொடுத்தும் இன்று வரை நடவடிக்கையும் இல்லை.

எனவே மாவட்ட ஆட்சியர் அதற்கு நேரில் ஆய்வு செய்து துணைத்தலைவர் பதவி தேர்வு செய்ய வேண்டும்" என கோரிக்கை வைத்தனர்....

Post a Comment

0 Comments