NEWS UPDATE *** ஜூன்.8ம் தேதி மதுரையில் பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை! *** கொரோனாவில் இறந்த காவலர் குடும்பத்தினருக்கு நிதி வழங்கிய திருச்சி காவல் ஆணையர்

கொரோனாவில் இறந்த காவலர் குடும்பத்தினருக்கு நிதி வழங்கிய திருச்சி காவல் ஆணையர்

திருச்சி மாநகர ஊர்காவல் படையில் கடந்த 18.01.2011 -ம் தேதி முதல் பணிபுரிந்து வந்த அடைக்கலராஜ் என்பவர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த 18.05.21 ஆம் தேதி  திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி 03.06.2021 ஆம் தேதி இறந்துவிட்டார்.....


அவரது குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு உதவும் வகையில் தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து 
ரூ.15,000 / – மற்றும் திருச்சி மாநகர ஊர்காவல்படையை சேர்ந்த ஆளிநர்கள் திரட்டிய நிதியையும் சேர்த்து மொத்தம் ரூ .85,000 / -க்கான காசோலையை அடைக்கலராஜின் மனைவி ஞானகியூரியிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வழங்கினார் . மேலும் காவல் உதவி ஆணையர் . திருச்சி மாநகர ஆயுதப்படை , ஊர்காவல்படை வட்டார தளபதி , துணை வட்டார தளபதி ஆகியோர் உடனிருந்தனர் .

Post a Comment

0 Comments