BREAKING NEWS *** சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு ஐந்தாண்டு சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டது அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வரும் 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு *** மனநல காப்பகத்திற்கு ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவை சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி

மனநல காப்பகத்திற்கு ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவை சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி

திருச்சி சாந்திவனம் மனநல காப்பகத்திற்கு ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவை சார்பில் இன்று ஒருநாள் உணவு வழங்கப்பட்டது........

திருச்சி அம்மாபேட்டை அருகே உள்ள சீதப்பட்டி பகுதியில் சாந்திவனம் என்ற மனநல காப்பகம் அமைந்துள்ளது. இங்கு 100 க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்....

இந்நிலையில் ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவை சார்பில் காப்பாகத்தில் உள்ள அனைவருக்கும் இன்று ஒருநாள் மூன்று வேளை உணவும் வழங்கப்பட்டது. ஹிந்து தர்ம பேரவையின் நிறுவன தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில பொருளாளர் ஜெகதீசன், மாநில மகளிரணி தலைவி பாக்கிய லெட்சுமி, மாநில மருத்துவர் அணி சங்கர நாராயணன், மாநில வழக்கறிஞர் அணி ராமகிருஷ்ணன், திருச்சி மாவட்ட தலைவர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் மணி உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின் நிறுவன தலைவர் ஜெகநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில்....

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்குவது தர்மம் ஆகும். இதைத்தான் ஹிந்து தர்மம் கூறுகிறது. அதன் அடிப்படையிலேயே இன்று இங்குள்ளவர்களுக்கு உணவு வழங்கியுள்ளோம்.

இளையராஜா கூறிய கருத்து வரவேற்கப் பட வேண்டியது. அவரது கருத்திற்கு ஹிந்து தர்ம பேரவையின் சார்பில் ஆதரவை தெரிவித்து கொள்கிறோம். கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதற்கு மாநில அரசு, மத்திய அரசின் மேல் பழி போடாமல் துரித நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என அமைப்பின் சார்பில் கோரிக்கை விடுக்கிறோம் என்று தெரிவித்தார்.

Post a Comment

0 Comments