திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மாற்றம் அமைப்பின் சார்பில் சிலம்ப விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டும் வாழ்த்துக்களும் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது..
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அன்னை தெரேசா பல்கலைக்கழகம் மற்றும் D.K.S.விளையாட்டு கழகம் சார்பில் கடந்த ஜூன் 4 மற்றும் 5 ம் தேதிகளில் மாநில அளவிலான சிலம்பம் விளையாட்டு போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சிலம்ப விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்..
சிறந்த சிலம்ப ஆசான் விருதை போதிதர்மன் தற்காப்பு கலை கூடத்தின் சிலம்ப விளையாட்டு பயிற்ச்சியாளர் ம. மாணிக்கம் அவர்களுக்கு வழங்கப்பட்டது இவர்களுக்கு திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கும் நிகழ்வு கல்லுக்குழி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது...
இந்நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் விளையாட்டு பிரிவு செயலாளரும் தடகள விளையாட்டு பயிற்ச்சியாளருமான டி.சுரேஷ் பாபு தடகள விளையாட்டு பயிற்ச்சியாளர் முணியான்டி அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா இணை செயலாளர் அல்லி கொடி போதிதர்மன் தற்காப்பு கலை கூடத்தின் சிலம்ப விளையாட்டு பயிற்ச்சியாளர் ராஜேஷ் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் மற்றும் திரளான சிலம்ப விளையாட்டு வீரர்கள் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
0 Comments